வியாழன், 21 ஜனவரி, 2016

ரோகித் வெமுலா மரணம் பௌத்த-பார்ப்பனிய மோதலின் தொடர்ச்சியே!

க.திருவள்ளுவன்.


இந்தியாவின் அனைத்து சேரிகளின் மீதும் நெடுங்காலமாக இந்துக்களால் யுத்தம் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ரோகித் போன்றவர்கள் அதில் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். யுத்தத்திற்கு தீர்வு யுத்தமாகாதுதான். ஆனால் யுத்தத்தை யுத்தத்தால்தான் நிறுத்தமுடியுமென்றால் அதற்கு தலித்துகள் தயாராக வேண்டியிருக்கிறது.
அறிவார்ந்த பௌத்த அறநெறியைக் கொண்டு அடக்கப்பட்டமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்துப்பாசிசத்தை வீழ்த்தி, சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்தைக்கைப்பற்றித் தம்மையும் பிறமக்களையும் பாதுகாத்திடவேண்டும். அதற்கு இந்து பிற்படுத்தப்பட்டவர்களின் வருகை இல்லாமல் போனால் இந்துக்கொடுங்கோலர்களிடமிருந்து தலித்துகள் தம்மை விடுவித்துக்கொண்டு தங்களின் பாதுகாப்புக்கான, சுதந்திரத்துக்கான பௌத்த நாட்டை உருவாக்கிக்கொள்ளுவதே சரியாகும். அப்படியில்லாமல் போனால் ரோகித்துகளின் மரணங்கள் தொடரவேச்செய்யும். ஏனெனில் ரோகித் போன்றவர்கள் கொல்லப்படுவது பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்துக்குமான மோதலின் தொடர்ச்சியேயாகும்.
நம் முன்னெடுக்க வேண்டிய கோரிக்கைகள்!
1. தலித்துகளுக்கு தனிப்பல்கலைக்கழங்களை தேசம் முழுவதும் துவக்கவேண்டும். அவற்றின் கீழ் தலித்துகள் மட்டுமே பயிலும்,பயிற்றுவிக்கும் கல்லூரிகள் உருவாக்கப்படவேண்டும். துணைவேந்தர், முதல்வர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் தலித்துகளாகவே இப்பல்கலைக்கழங்களிலும் கல்லூரிகளில் நியமிக்கப்படவேண்டும்.
2.கலை,வரலாறு,அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் என அனைத்து துறைக் கல்விகளையும் கட்டணம் ஏதுமின்றியே தலித் மாணர்வகளுக்கு வழங்கவேண்டும். \
3.தலித் மாணவர்களுக்கான விடுதிகள் அனைத்து வசதிவாய்ப்புகளையும் பாதுகாப்பு உறுதியையும் கொண்டு மேம்படுத்தப்படவேண்டும்.
4.தலித்துகளுக்காக ஒதுக்கப்படும் கல்விக்கான நிதிகளை தலித்துகளை மட்டுமேக் கொண்ட கவுன்சில்கள் மூலம் செலவிடப்படவேண்டும்.
5.இறந்த(படுகொலையான) தலித் மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு நட்ட ஈடாக ரூபாய் 1 கோடிரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிலம் வழங்கப்படவேண்டும்.
6.தலித் மாணவர்களின் மரணங்கள் குறித்து தலித் தலைமையிலான தனி விசாரணைகள் அமைத்து விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றங்கள் வெளிக்கொண்டுவரப்படவேண்டும்.
7. உடனடியாகா, இந்தியா முழுவதும் உள்ள தலித் மாணவர்களின் நிலைக்குறித்து தலித் தலைமையில் அரசால் அமைக்கப்படும் குழுக்களைக்கொண்டு ஆராய்ந்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்

கருத்துகள் இல்லை: