வெள்ளி, 19 ஜூன், 2015

அண்ணல் அம்பேத்கர் பேரன் மீதான கொலைவெறித் தாக்குதல்.

கடந்த 16-6-2015 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரனும் 'குடியரசு சேனா' வின் தலைவருமான சகோதரர் ஆனந்தராஜ் அம்பேத்கர் மீது, மகாராஷ்டிரா மாநிலம் ராய்க் காட் பகுதியில் ஆயுதங்களைக்கொண்டு கொலைவெறித்தாக்குதலை சிலர் நடத்தியிருக்கிறார்கள். இதில் ஆனந்தராஜ் அம்பேத்கரின் ஆதரவாளர்கள் நான்குபேர் கடுமையாகக் காயமடைந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடம் என்றும் கூறப்படுகிறது.

மும்பை தாதரில் அண்ணலுக்கு மணிமண்டபம் கட்டவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ள ஆனந்தராஜ் அம்பேத்கர் மீது சிவசேனாவின் குண்டர்கள்தான் கொலைவெறித்தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. சிவசேனாவின் இந்த கொலைவெறித்தனத்தை இந்தியாவின் அனைத்து தலித் அமைப்புகளும் கண்டிக்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் சிவசேனாமீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தங்கள் அமைப்புக்கு ஆயுதப்பயிற்சியெல்லாம் கொடுத்து, படையெல்லாம் வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவருக்கு 'Z' பிரிவு பாதுகாப்பைக்கொடுத்துள்ள மத்திய பிஜேபி கூட்டணி அரசு, தலித் தலைவர்களுக்கு எவ்விதமான பாதுகாப்பையும் கொடுப்பதில்லை என்பதையே இவ்வெறித்தாக்குதல் காட்டுகிறது.


-க.திருவள்ளுவன்.