செவ்வாய், 30 ஜூன், 2015

சேலத்தில் தொடரும் ஜாதிவெறி வன்முறை!

கோகுல்ராஜ் கொலையால் சேலம் பகுதி பதற்றமாக இருக்கிறது. நம் உறவுகள் தினமும் அங்கே கூடி போராடிவருகிறார்கள். ஆனால், எந்த தடையுமின்றி அதே சேலம் மாவட்டத்தில் ஜாதிவெறியர்கள் ஒரு சேரியை தாக்கி சூறையாடியிருக்கிறார்கள். சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், சோமம்பட்டி கிராமத்தின் தலித் இளைஞனும் வன்னிய பெண்ணும் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து வெறிக்கொண்ட வன்னியர்கள் 29-06-2015 அன்று நள்ளிரவில் சோமம்பட்டி சேரியைத்தாக்கி தீவைத்தும் இருக்கிறார்கள். 
கோகுல்ராஜ் கொலைக்கு நியாயம் கேட்ட அவரது குடும்பத்தையும் சமூகப்போராளிகளையும் கைது செய்த காவல்துறை சோமம்பட்டி தாக்கப்பட்டபோது எங்கே போனது. ஜாதிவெறியர்களுக்கு காவல்துறை மீதோ அரசின் மீதோ எவ்விதமான அச்சமும் இல்லை. காவல்துறைக்கும் அரசுக்கும் தலித் மக்கள் மீது எவ்விதமான அக்கறையுமில்லை.
------ஸ்டாலின் தி