வியாழன், 20 ஆகஸ்ட், 2015

இந்து மதத்திலிருந்து வெளியேறுவது மட்டும் தலித்துகளுக்கு தீர்வாகுமா?

ஸ்டாலின் தி

இந்து மதத்திலிருந்து தலித்துகள் வெளியேறியே ஆகவேண்டும் என்பதை மறுக்க முடியாது. இந்துமதம் நமக்கு மதமல்ல;அடக்குமுறைச் சிறைகூடம். எனவே அதில் இருப்பது கூடாது. அதேவேளையில் 2006 இல் நடந்த கயர்லாஞ்சி கொடூரத்தை உதாரணமாகக் கொண்டும் சிந்திக்கவேண்டியுள்ளது. மராட்டிய மாநிலம் கயர்லாஞ்சி கிராமத்தில் பௌத்தம் ஏற்ற குடும்பத்தின் தலைவர் பையலால். இவருக்கு கொஞ்சம் நிலமும் கிராமத்துக்கு வெளியே இருந்தது. பையலால் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டதை சாதி இந்துக்கள் விரும்பவில்லை. நிலம் வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போதாததுக்கு ஒரு கல் வீடு கட்டவும் அவர் முயன்று சாதி இந்துக்களின் வயிற்றில் நெருப்பள்ளிப் போட்டார். வெகுண்ட சாதிவெறியர்கள் பையலாலின் மனைவி, மகள்(சிறுமி), இரண்டு மகன்களை நிர்வாணமாக அடித்து இழுத்துவந்து ஊர் மத்தியில் தள்ளி தாக்கினர். பையலாலின் மனைவியையும் மகளான இளம் பெண்ணையும் தங்கள் சாதி ஆண், பெண்களுகளுக்கு மத்தியில் வரிசையில் நின்று வல்லுறவுசெய்தனர். பையலாலின் மகன்களை அவர்களின் தாயோடும் சகோதரியோடும் புணர வற்புறுத்தினார்கள். அதை மறுத்தபையலாலின் மகனின் ஆண்குறியை அறுத்து வீசினார்கள். பையலாலின் மகன்களை வாணம் நோக்கி தூக்கி தூக்கி வீசினார்கள். தரையில் மோதி மோதி உயிர்விட்டார்கள் அந்த மகன்கள். பையலாலின் மனைவி மகள் இருவர்களின் பிறப்புறுப்புகளில் மாடு கட்டும் மரக்கழிகளைச் சொருகி சிதைத்தனர். இறுதியாக கொலையுண்ட அந்த நான்கு அப்பாவிகளையும் தூக்கி வீசிவிட்டு சென்றது அந்த ஜாதிவெறிக்கும்பல்.

பையலால் குடும்பத்திலிருந்து நாம் இரண்டு விஷயங்களை பெறுகிறோம். ஒன்று பௌத்தம் ஏற்பதே சாதிவெறிக்கெதிரான சரியான நடவடிக்கை. அதனால்தான் சாதி வெறியர்கள் அவ்வளவுக் கடுமையாக கோபமடைந்தார்கள். அடுத்தது நாம் பௌத்தம் ஏற்றாலும் சாதி இந்துக்களின் ஆதிக்கம் நிலவக்கூடிய கிராமத்தில் இருப்பது பாதுகாப்பாக இருக்கமுடியாது. பௌத்தராவது எவ்வளவு முக்கியமோ அது போலவே இந்துக்களின் எல்லாவித ஆதிக்கத்திலிருந்தும் வெளியேறுவதும் முக்கியமானது.பௌத்தரான பின்னும் இந்துக்களுக்கு மத்தியிலேயே வாழ நேரிட்டால் பையலால் குடும்பம் கண்ட கொடுமையையே நாமும் காண நேரிடும்.
ஆக, இந்து மதத்திலிருந்து மட்டுமல்ல, இந்து கிராமத்திலிருந்தும், இந்து வயல்களிலிருந்தும், இந்து கட்சிகளிலிருந்தும், இந்து ஆட்சியிலிருந்தும் முற்றிலுமாக வெளியேறவேண்டும். அதற்கு‪, ‎பௌத்தம், தலித்மாநிலம்  தன்னாட்சியே தீர்வாகும்‬!