புதன், 12 ஆகஸ்ட், 2015

கால்டுவெல்

கால்டுவெல்லின் பறையர் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்துக்கொண்டிருந்தேன்(தமிழில்-கவிதாச்சரண்).  அதில் விவாதிக்க நிறைய இருக்கிறது. ஆனால் கால்டுவெல் சொல்லியுள்ளதில் ஒன்று எனக்கு பிடித்திருந்தது. அதைத்தான் கால்டுவெல்லைப் படிப்பதற்கும் முன்பே நாங்கள் இங்கே முகநூலில் பலமுறை எழுதியுமிருக்கிறோம். கால்டுவெல் சொல்லியது, " ஒருவன் தன்னைத் தமிழன் என்று அழைத்துக்கொண்டால் அவன் பார்ப்பனனோ அல்லது தாழ்ந்த சாதிக்காரனோ அல்லாத சூத்திரனையே குறிப்பதாகும்".

அதாவது கால்டுவெல் காலத்திலும் நம் தலித்துகள் தமிழன் என்னும் வட்டத்துக்குள் அடக்கிக்கொள்ளவில்லை. சூத்திர திராவிடனும் தலித்துகளை தமிழன் வட்டத்துக்குள் சேர்க்கவில்லை. அதைத்தான் இப்போதைய சூத்திர தமிழ்தேசிய அரசியலும் காட்டுகிறது. அப்படியானால் தலித்துகளாகிய நாம் யார்? அதைத்தான் அண்ணலும் அதற்கும் முன்பாக பண்டிதரும் சொல்லிப்போயிருக்கிறார்கள். நாம் இந்திர தேசமென்னும் இந்திய பூர்வக்குடி பௌத்தர்கள். தமிழன் சூத்திரன். சூத்திரன் இந்து. சூத்திரனுக்கும் தலித்துகளுக்கும் இடையில் உள்ள முரண் இதுதான்.


__ஸ்டாலின் தி

கருத்துகள் இல்லை: