செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

தமிழக அரசே!

தமிழ அரசே!
1.நிரந்தரமாக மதுக்கடைகளை மூடவேண்டும்.
2.மதுவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வுத்தீர்வு காணவேண்டும்.
3.குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை செய்துகொடுக்க வேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழி செய்யவேண்டும்.
4.மதுவுக்கு பொறுப்பேற்றுள்ள அரசியல்வாதிகள்,அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். அவர்கள் மீது குற்றவியல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
5. மது ஆலை முதலாளிகள் மீதும் குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்கவேண்டும். மக்களிடம் சுரண்டி,கொள்ளையடித்து குவித்துவைத்துள்ள அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்.
6.மதுக்கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று அரசு வேலை வழங்கிடவேண்டும். அவர்கள் செலுத்தியுள்ள முன் வைப்புத்தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும்.
7.மதுவுக்கெதிரான போராட்டத்தில் உயிர்க் கொடுத்த பெரி.கண்ணையன், சசிபெருமாள் ஆகியோரை 'போதை ஒழிப்புத் தியாகிகள்' என்று அறிவித்து 'தியாகிப் பென்ஷனும்,  தலா 1 கோடி ரூபாய் நட்ட ஈடாகவும்,  அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்கிடவேண்டும்.
8.மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராடிய போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறவேண்டும்.
9.மதுவுக்கெதிரானப் போரட்டத்தில் மாணவர்கள்,பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, பணிநீக்கம் செய்யவேண்டும்
11.மதுவுக்கெதிராகப் போராடிய தலித்துகளைத் தாக்கிய காவல்துறை மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,பணிநீக்கம் செய்யவேண்டும்.
12.மதுவுக்கெதிரான போராட்டத்தில் காவல்துறையால் தாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்றின் படி 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 இலட்சம் ரூபாய் வரை நட்ட ஈடு அளிக்கவேண்டும்.
13. மதுவுக்கெதிரான போராட்டத்தில் காவல்துறையால் தாக்கப்பட்ட தலித்துகளுக்கு கூடுதலாக 'சிறப்பு நட்ட ஈடு' வழங்கவேண்டும்.
14. போராட்டத்தில் காயம்படாவிட்டாலும் கைதுசெய்யப்பட்டிந்தாலே போராட்டக்காரர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நட்ட ஈடு வழங்கவேண்டும். கைது செய்யப்பட்ட தலித்துகளுக்கு கூடுதலாக 'சிறப்பு நட்ட ஈடு' வழங்க வேண்டும்.


க.திருவள்ளுவன்.

கருத்துகள் இல்லை: