வெள்ளி, 12 ஜூன், 2015

அரசு மருத்துவமனையின் அலட்சியம், தலித் பெண் மரணம்.

கடலூர் மாவட்டம் சிவக்கம் கிராமத்தைச் சேர்ந்த விதவைப்பெண்ணை 12-6-2015 அன்று காலை பாம்புக்கடித்தது. அவரை உள்ளூர்ப்பகுதி ஆரம்பசுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர்கள் முதல் உதவி செய்துவிட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி கூறினர். அதைத்தொடர்ந்து அப்பெண்ணை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். ஆனால் சுமார் மூன்று மணிநேரம் எந்த மருத்துவ உதவியையும் செய்யாமல் மருத்துவமனை அலட்சியம் காட்டியுள்ளது. பிறகு வந்த மருத்துவர் பரிசோதித்துவிட்டு 'நார்மல்'தான் என்று மருத்துவ பணியை முடித்துவிட்டார். 'நார்மல்' என்ற சான்றையும் கொடுத்து, சாப்பிட டீ,பண் கொடுக்கச்சொல்லியுள்ளனர். டீயும் ரஸ்கையும் சாப்பிட்ட அப்பெண் சுமார் 20 நிமிடத்தில் வாயில் நுரைத்தள்ள துடித்துடித்து இறந்துள்ளார். இறந்தப்பெண் தலித் பெண். விதவையான அவருக்கு 7 வயதிலும் 5 வயதிலும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருவீட்டு பாட்டனார்களும் பாட்டிகளும் கூட இல்லை. அக்குழந்தைகள் அனாதைகளாக இன்று கதறி நிற்கின்றனர்.

மருத்துவமனை 'நார்மல்' என்று சொல்லிக்கொடுத்த சான்றையும் உடனடியாக திரும்ப வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இம்மரணம் ஒரு கொலையைப்போல்தான் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.மருத்துவ மனையில் பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து உள்ள போதும் அது பயன்படுத்தப்படவில்லை. பாமர சேரிப்பெண்ணின் உயிரை மருத்துவரும் மருத்துவமனையும் அலட்சியம் செய்ததன் விளைவு ஓர் அப்பாவி ஏழை தலித் பெண் மரணமடைந்துள்ளார். அவரது மழலைகள் அனாதைகளாக கதியற்று நிற்கிறார்கள்.

தமிழக அரசே!

உயிரிழந்தப்பெண்ணின் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நட்ட ஈடு கொடு!

மருத்தவர் மற்றும் உழியர்மீது குற்றவியல் சட்டப்படி வழக்குப்ப்திவு செய்து உடனடியாக கைது செய்!

மருத்துவக்குற்றவாளிகள் தலித்தல்லாதவராக இருப்பின் அவர்கள்மீது எஸ்.சி./எஸ்.டி.வன்கொடுமை வழக்கின் கீழ் நடவடிக்கை எடு!

உயிரழந்த பெண்ணின் உறவினருக்கு அரசு மருத்துவ மனையில்  வேலைக்கொடு!

தலித்/பழங்குடிகளுக்காக தனி மருத்துவமனைகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவு!

---க.திருவள்ளுவன்.


கருத்துகள் இல்லை: